வவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளுக்கு உதவித் திட்டங்களை பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று (11.08.2019) வழங்கி வைத்தார்.
வவுனியா சாம்பல் தோட்டம் ஸ்ரீ சாய் திருமண மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே இவ் உதவித்திட்டங்கள் வழங்கிப்பட்டிருந்தன.
இதில் 300 பயணாளிகளுக்கு காசோலைகளும் 300 பயனாளிகளுக்கு தென்னங்கன்றும் வழங்கி வைக்கப்பட்டன.





