
சவூதி அரேபிய இளவரசருக்கு கொலைவழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது. துபாயில் சவூதி இளவரசர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரபியரை கொலை செய்துள்ளார்.
அந்நாட்டு வழக்கப்படி கொலையாளி சார்பில் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்க்கு பெருந்தொகை ஒன்றை கொடுத்து விட்டால் மரண தண்டனையிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது.
மேலும் சவூதியில் இதுவரை மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடதக்கது.




