வவுனியா குருமன்காட்டில் குழு மோதல் : ஏழு பேர் கைது!!

379


குழு மோ தல்



வவுனியா குருமன்காட்டில் இன்று (12.08) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குழு மோ தலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



குருமன்காடு பகுதியில் இன்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோ தலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தா க்குதல் மேற்கொண்டுள்ளனர்.




இத் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவ் இளைஞர் குழுக்கள் ம துபோ தையில் இருந்ததாக அப் பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.