வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!!

328

விபத்து

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (14.08.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியூடாக யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கார் திடீரென பிறேக் பிரயோகித்த சமயத்தில் காருக்கு பின்பாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.