வவுனியா பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய இரதோற்சவம்![?]

475

இரதோற்சவம்

வவுனியா பண்டாரிகுளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ரததோற்சவத் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த முதலாம் திகதி ஆரம்பித்த பண்டாரிகுளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் 14 ஆம் நாளாகிய இன்று ரததோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மகோற்சவ கால பிரதம குரு சிவஸ்ரீ சதாசங்கரதாஸ் சிவாச்சாரியார் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராகுலசர்மா ஆகியோரின் தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள், அபிஷேகங்கள் இடம்பெற்று முத்துமாரி அம்மன் உள்வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்துடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வெளி வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள்பாளித்தார்.

பல நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் வவுனியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்து தேங்காய் அடித்தும், கற்பூர சட்டி ஏந்தியும், அங்க பிரதிஸ்டை செய்தும் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர்.

பால் காவடி, தூக்கு காவடி என்பன எடுத்தும் அடியார்கள் தமது நிவர்த்திக் கடன்களை பூர்த்தி செய்தனர். பக்தர்களின் அரோகரா கோசத்துடனும், பக்திப் பஜனைகளுடனும், மேளதாளங்களும் ரத்தில் வலம் வந்த முத்துமாரி அம்மன் பக்தர்களுக்கு அருளினை அள்ளி வழங்கினார்.