வவுனியாவில் பிளாஸ்ரிக் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு!!

389

விழிப்புணர்வு

பிளாஸ்ரிக் போத்தல்களின் பாவனை மற்றும் அதன் மீள் சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடு வவுனியா நகரசபையிலும், நகர்ப்பகுதியிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபையின் தலைவர் இ.கௌதமன் தலைமையிலான குழுவினரால், வவுனியா நகர்ப்பகுதியில் வீதியோரங்களிலும், வேறு இடங்களிலும் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதமாக வீசப்படும் பிளாஸ்ரிக் போத்தல்களை மீள்சுழற்சிக்காக சேமிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் நகரசபையின் உறுப்பினர்கள், வவுனியா வளாக மாணவர்கள், சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள் இணைந்து இத் திட்டத்தை முன்னெடுத்தனர்.