வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கிய பேரூந்து தரிப்பிடங்கள்!!

312

பேரூந்து தரிப்பிடங்கள்

வவுனியாவில் இன்று (17.08.2019) காலை 7.30 மணி தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் வீதி வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது.

நீர் வழிந்தோடி செல்லும் வடிகால்களில் நீர்பாசன திணைக்களத்தின் குழாய்கள் காணப்படுவதினால் (குறித்த குழாய்களுள் குப்பைகள் அடைந்த நிலையில் காணப்படுகின்றது) நீர் வழிந்தோடிச் செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே குறித்த பேரூந்து தரிப்பிடம் நீரில் முழ்கியுள்ளது.

அத்துடன் கூமாங்குளம் , நெளுக்குளம் பகுதி வீதிகளும் வெள்ளத்தில் முழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வறட்சியான சூழ்நிலை நிலவி வந்த நிலையில் நேற்றையதினமும் இன்றும் பெய்து வரும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.