வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் பெயர்ப்பலகை விசமிகளால் உ டைப்பு!!

349


பெயர்ப்பலகை விசமிகளால் உ டைப்பு



நேற்று இரவு எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட தலைமை காரியாலயத்திற்கு வவுனியா நகரசபையின் அனுமதியுடனாக பொறுத்தப்பட்டிருந்த வழிகாட்டி பெயர் பலகை சில விசமிகளால் த கர்த்தெறியப்பட்டுள்ளது மனவேதனையளிக்கின்றது.



எனினும் இது சம்பந்தமாக வவுனியா காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருக்கின்றது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,




வவுனியா நகரசபை அனுமதியுடன் நாம் பொறுத்தியிருந்த இந்த வழிக்காட்டி பலகையின் ஊடாக பலர் நன்மைகளைப் பெற்று வருகின்றார்கள். வவுனியா நகரிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எமது அலுவலகத்தை கண்டுபிடித்து வர முடியாத நிலையில் மக்கள் இருந்த பொழுது இவ் வழிகாட்டி பெயர்பலகைகள் ஹொரவப்பொத்தானை பிரதான வீதியிலும் ஒழுங்கைக்குள்ளும் பொறுத்தப்பட்டிருந்தன.


இதனூடாக அண்மைக்காலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் எனது அலுவலகத்திற்கு வந்து தமக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இவ்வறான நிலையில் மக்களுக்கு வழிட்டியாக இருந்த இப்பெயர் பலகையை தகர்த்தெறிவதன் ஊடாக பிரபா கணேசனை அ ழித்து விட முடியும் என்று நினைக்கின்றார்கள்.

ஆனால் இவர்களது செயல்பாட்டின் ஊடாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் கல்விக்கான உதவியினையே இவர்கள் த கர்த்தெறிந்துள்ளார்கள் என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் செயல்பாட்டினால் பாதிக்கப்படுவது அப்பாவி ஏழை எளிய பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுமேயாகும்.

இவ்வாறான வ ன்முறை சம்பவங்களை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். கோழைகள் போல் நள்ளிரவில் இவ்வாறான அ டாவடித்தனத்தை செய்பவர்களை நேரடியாக சந்திக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்று இதனை கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கான எமது இளைஞர் அணி தோழர்கள் வெகுண்டு எழுந்துள்ளார்கள்.

இவர்களை சமாளிப்பது இன்று சிரமமான காரியமாக எனக்குள்ளது. வன்முறைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மாறாக நேர்மையான, ஊ ழலற்ற மக்கள் பால் அன்பு கொண்ட எனது அரசியலுடன் இணைந்து செயல்பட வருமாறு என்னை எதிரியாக நினைப்பவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.