வண்டுத்தாக்கம்
வவுனியாவில் பல இடங்களில் தென்னை மரங்களில் வண்டுத்தாக்கம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இனந்தெரியாத வண்டு இனம், இளம் தென்னங்கன்றுகளை தாக்குவதால் அவை முறிந்து வீழ்ந்தும், ஓலைப்பகுதி கருகியும் அழிந்து வருகின்றது.
ஒலுமடு, மருதோடை, மாமடு கிராமங்களில் இந்த வண்டுத்தாக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்னைச்செய்கையை கைவிடும் நிலைக்கு தாம் சென்றுள்ளதாக தென்னைப்பயிர்ச்செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.