வவுனியா தாண்டிக்குளத்தில் கன்றுக்குட்டிகளை மோதித்தள்ளிய புகையிரதம்!!

414

தாண்டிக்குளத்தில்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதி இரண்டு கன்றுக்குட்டிகள் உ யிரிழந்ததுடன் கன்றுக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளது. இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரத்திலேயே தண்டவாளத்தில் நின்ற மூன்று பசுக்கன்றுகள் மோதுண்டுள்ளன.

இதன் காரணமாக இரு கன்றுகள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்ததுடன்
காயமடைந்த கன்றுக்கு அப்பகுதி மக்கள் சிகிச்சை அளித்திருந்தனர். தாண்டிக்குளம் பகுதியில் அண்மைல் 10 மாடுகள் புகையிரத்தில் மோதுண்டு ப லியாகியிருந்திருந்தன.

இதேவேளை யாழ்.தென்மராட்சி, எழுதுமட்டுவாழ், பகுதியில் நேற்று புகையிரதம் மோதி 5 கால்நடைகள் உ யிரிழந்துள்ளன. புகையிரதத்தில் கால்நடைகள் மோதி உ யிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கால்நடை வளர்ப்போர் அவைகளைக் கட்டாக்காலிகளாக விடுவதாலேயே விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. இவ்வாறான உ யிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தமது கால்நடைகளைக் கட்டி வளர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.