வவுனியா ‌புதிய கற்பகபுரம் கிராம மக்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு!!

339

மகஜர் கையளிப்பு

வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கிராமத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மகஜரொன்றினை கற்பகபுரம் கிராம மக்கள் இன்று கையளித்துள்ளனர்.

புதிய கற்பகபுரம் கிராமத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் கடந்த 3 வருடங்களாக செயற்படாமல் உள்ளது என்றும் அதனை புதுப்பித்து தருமாறு தெரிவித்த மக்கள், கிராமத்திற்கு வீதிகள் புனரமைப்பு செய்யப்படவில்லை, வீதியால் மக்கள் பயணிக்க முடியாதுள்ளது. எனவே இவற்றை சரிசெய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புதிய கற்பகபுரம் கிராமத்தவர்களின் விடங்களை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததுடன். கிராம மக்களை பிரதேச செயலாளரிடம் சென்று குறித்த விடயங்களை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பிரதேச செயலாளாரிடம் சென்ற கிராமத்தவர்கள் பிரதேச செயலாளரிடமும் தமது கிராமத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பியிருந்ததுடன் தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை கூட்டி நிர்வாகத் தெரிவை செய்யுமாறும் கோரியிருந்தனர்.