வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!!

353

போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2019) காலை காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை மற்றும் பளை மருத்துவமனை மருத்துவர் சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் தொடர் போராட்டம் முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே இன்று மதியம் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு, விடுதலை செய் விடுதலை செய் மருத்துவரை விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும்,

போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு கதறி அழுது போராட்ட களத்தில் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.