வவுனியா செட்டிக்குளத்தில் கோர விபத்து : 9பேர் படுகாயம்!!

362


கோர விபத்து



வவுனியா செட்டிக்குளம் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் இன்று (25.08.2019) காலை 7.40 மணியளவில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



வத்தளை பகுதியிலிருந்து மடு நோக்கி பயணித்த வான் ஆண்டியாபுளியங்குளம் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.




இவ் விபத்தில் வானில் பயணித்த 11 பேர் படுகாயமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.