வவுனியாவில் பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த இளைஞர்களுக்கான தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்!!

328

தலைமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்

பல்வேறு நாடுகளில் இருந்து வருகைதந்த இளைஞர்களுக்கான சமாதானம் மற்றும் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் வவுனியா, ஆண்டியாபுளியங்குளத்தில் ஆரம்பமானது.

பல்வேறு நாடுகளிலும் இருந்து வருகை தந்த இளைஞர்கள் கலந்துகொண்டுள்ள இந் நிகழ்வில் சமூக நலிணக்கம், சமாதானம் மற்றும் இளைஞர்களுக்கான தலைமைத்துவம் தொடர்பான கருத்துரைகள் இடம்பெற்றிருந்தது.

வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந் நிகழ்வில் இளைஞர்கள் மத்தியில் இருந்து தலைமைத்துவத்தினையும் நல்லிணக்கத்துடன் கூடிய சமாதானத்தினையும் கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.