வவுனியாவில் வீதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

336

வெ டிபொருட்கள் மீட்பு

வவுனியா கோவிற்குளம் 10ம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (29.08.2019) காலை 10 மணியளவில் வெ டிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.

கோவிற்குளம் 10 ஒழுங்கையிலுள்ள குளம் ஒன்றை மீள்புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் பேக்கோ இயந்திரம் மூலம் குளத்திற்கு செல்லும் வீதி செப்பனிடும் பணியினை இன்று காலை ஆரம்பித்திருந்தனர்.

வீதி செப்பனிடும் பணியின் போது மண்ணில் புதையுண்ட நிலையில் வெ டிபொருட்கள் காணப்பட்டுள்ளன. அதனையடுத்து பேக்கோ வாகனத்தின் சாரதி வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் வெ டி பொருட்களை பார்வையிட்டதுடன் வெ டிபொருட்களை சுற்றி எச்சரிக்கை வேலியினை அமைத்தனர்.

அப்பகுதியிலிருந்து 100 மீற்றர் வெ டிபொருள் வயர் தொகுதி ஒன்று , கு ண்டினை வெடிக்க செய்யும் கிளிப் ஒன்று , டெட்டனேட்டர்கள் இரண்டு ஆகிய வெ டிபொருட்களே மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தில் மேலும் சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளவும் குறித்த வெ டிபொருட்களை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதற்கான நீதிமன்ற உத்தரவினை பெறுவதற்குறிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.