வவுனியா நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம் : மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!!

289

யானைகள் அட்டகாசம்

வவுனியா நெடுங்கேணி பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது.

நேற்று மாலை வவுனியா, நெடுங்கேணி பகுதியில் உள்ள சேனைப்புலவு, சிவாநகர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்த யானை அப் பகுதியில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த மக்களை விரட்டியதுடன், தென்னந்தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை அழித்துள்ளது.

குறித்த யானைகளின் அட்டகாசத்தால் நூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.