வவுனியாவில் கா ணாமலாக்கப்பட்டோர் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போ ராட்டம்!!

323

மாபெரும் போ ராட்டம்

கா ணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உரிய நீதியை அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்தி உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மா பெரும் போ ராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கா ணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கை சேர்ந்த கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போ ராட்டம் இன்று (30.08.2019) காலை ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பிள்ளையார் ஆலயத்தில் காலை 10.30 மணிக்கு தேங்காய் உடைத்து வணங்கிய பின்னர், ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகிய பே ரணி ஓமந்தை இறம்பைக்குளம் வரை சென்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள், அரசு நீதியை தர வேண்டும் ஓ.எம்.பி வேண்டாம், இராணு வத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே எனவும் கோசங்களை எழுப்பினர்.

இதன்போது கா ணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீதரன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சத்தியலிங்கம், தியாகராஜா, இந்திரராஜா, தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்தவர்கள் உட்பட பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.