வவுனியா ஓமந்தையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் : பெண் ஒருவர் பொலிசில் முறைப்பாடு!!

443

பெண் ஒருவர் பொலிசில் மு றைப்பாடு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் போ ராட்டம் மேற்கொள்ளப்பட்ட போது முன்னர் இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் இருந்த தமது காணி வேலி அகற்றப்பட்டதாக பெண் ஒருவர் ஓமந்தைப் பொலிசில் மு றைப்பாடு செய்திருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த மு றைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் போ ராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க உறுப்பினர்களை அழைத்த பொலிசார் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது இரு பகுதியினரும் பின்னர் சமாதானமாக சென்று விட்டனர். இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போது போ ராட்டமானது ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் வந்தடைந்த போது, அங்கு வைத்தே தமது பிள்ளைகளை ஒப்படைத்ததாக அப்பகுதியில் இருந்த காணி வேலியை அகற்றிய ஆ ர்ப்பாட்டக்காரர்கள் உட்சென்று ஆ ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.