வவுனியாவில் கா ணாமல் போன இரு பிள்ளைகளின் தாயார் வவுனியா பொலிஸ் நிலையத்தில்!!

319


வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வவுனியா காத்தான்கோட்டம் பகுதியினை சேர்ந்த 39 வயதுடைய ஜெனிதாஸ் விமலேஸ்வரி என்பவரை கா ணவில்லை என அவரது கணவர் கடந்த 28ம் திகதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடொன்றினை மேற்கொண்டிருந்தார்.



இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதையடுத்து குறித்த பெண் தொடர்பாக பொலிஸாருக்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை பொலிஸார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வி சாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.

குறித்த பெண்ணிடம் வவுனியா சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதுடன் குடும்பத்தினருக்கும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.



பெண்ணிடம் விசாரணைகள் முடிவுரும் வரையும் எவ்வித தகவலையும் வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.