வவுனியா பொலிஸாரின் சோதனையும் அணிவகுப்பும்!!

318

சோ தனையும் அணிவகுப்பும்..

வவுனியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் அரையாண்டுக்கான சோ தனைகள் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் திணைக்களத்தினால் இன்று (31.08.2019) இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலாத சில்வா தலைமையில் இச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் அணிவகுப்பு இடம்பெற்றன.

பொலிஸ் நிலையங்களை ப ரிசோதித்தல், பொலிஸாரின் உடைகளை ப ரிசோதித்தல், மோப்ப நாயைப் ப ரிசோதித்தல், பொலிஸாரின் பாவனையிலுள்ள ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதிக்கப்பட்டன.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்திலுள்ள மைதானத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.பி.திஸ்ஸாலாத சில்வா, உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே, வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.பிரசன்ன வெலிகல, வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட வவுனியா பிராந்தியப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.