வவுனியாவில் வவுனியா தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம்!!

321

சிந்தனை அரங்கம்

வவுனியா தமிழ்ச் சங்கத்தின் சிந்தனை அரங்கம் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் இன்று (01.09.2019) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெற்றது.

சேதன விவசாயம் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இவ் அரங்கினை தமிழருவி த.சிவகுமாரன் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

ஆதி விநாயகர் ஆலய பரிபாலனசபை பொருளாளர் பாலசுப்பிரமணியம் செல்வஉதயம் அவர்கள் மங்கள விளக்கேற்றி வைத்ததுடன் அரங்கம் இனிதே ஆரம்பமாகியது.

அரங்கின் தொடக்கவுரையினை வவுனியா விவசாயத்திணைக்கள விதை மற்றும் நடுகைப்பொருட்கள் பிரதி விவசாயப்பணிப்பணிப்பாளர் தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் நடாத்தியிருந்ததுடன் சித்தனையுரைகளை பாஸ்கரமூர்த்தி நேசராஜா, ஆறுமுகம் பிரபாகரன், முத்தையா நந்தகுமார், சிவசுப்பிரமணியம் பத்மநாதன் நடாத்தியிருந்தனர்.

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர் பாலபிரசன்னா, தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார், வர்த்தகர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.