டக்ளஸ் சந்திப்பு
வவுனியாவில் இயங்கி வரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள், தமது கட்சியினால் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள், எதிர்வரும் தேர்தலில் செயற்படுவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும், கட்சி உறுப்பிர்களுக்கிடையிலும் கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன், கட்சியின் பிரமுகர்கள், ஈ.பி.டி.பி யின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன