வவுனியா செட்டிகுளத்தில் யானைகள் அட்டகாசம் : 50க்கு மேற்பட்ட தென்னைகள் நாசம்!!

350

யானைகள் அ ட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் முகத்தான்குளம் பகுதியில் யானைகளின் அ ட்டகாசத்தால் தென்னந்தோட்டங்கள் பல நா சமாகியுள்ளது.

வவுனியா செட்டிக்களம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகத்தான்குளம் பகுதியில் கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் அப்பகுதியிலுள்ள பல தென்னந்தோட்டத்திற்குள் புகுந்து தென்னை மரங்களை அழித்து நசமாக்கியுள்ளது.

குறித்த யானைகளின் அட்டகாசத்தால் ஐம்பதுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அ ழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.