வவுனியாவில் புளொட் இராணுவத் தளபதி மாணிக்கதாசனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தாகசாந்தி நிலையம்!!

510

தாகசாந்தி நிலையம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ),

திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள் ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.

மாணிக்கதாசனின் நினைவாக, இன்று (03.09.2019) அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் மற்றும் இராணுவத்தளபதி மாணிக்கதாசன் ஆகியோரின் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டுள்ளது.