வவுனியாவில் விபத்து : இருவர் படுகாயம்!!

314

விபத்து

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று , மகிழூந்து ஒன்றை முந்திச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியையும் முறையற்ற விதத்தில் முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்தில் 30, 25 வயதுடைய கணவன் மனைவி ஆகிய இருவருமே காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.