வவுனியாவில் தீப்பிடித்து எரிந்து தனியார் பேருந்து!!

342

தனியார் பேருந்து

வவுனியா பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில்,

இன்று காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து பம்பைமடு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பேருந்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்துள்ளது என தெரியவருகிறது. பேருந்தில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.