வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல்!!

326

கலந்துரையாடல்

வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கலந்துரையாடல் நிகழ்வு இன்று (07.09) வவுனியாபுகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையால் எதிர்வரும் 16.09.2019 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வின் ஏற்பாடுகள் குறித்தும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.