வவுனியாவில் மணல் ஏற்றி வந்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்!!

346

ஏற்பட்ட விபரீதம்

வவுனியா மடுகந்தை பகுதியில் இன்று (08.09) அதிகாலை டிப்பர் வாகனம் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெப்பற்றிகொல்லாவ யானுஓயா பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் மடுகந்தை பகுதியில் (மடுகந்தை தேசிய பாடசாலைக்கு அண்மையில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் டிப்பர் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் சாரதியின் தூக்கம் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த மடுகந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.