வவுனியாவில் மோட்டார் சைக்கிலை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி : ஒருவர் படுகாயம்!!

330

விபத்து

வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (09.09.2019) மதியம் 1.15 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி மோட்டார் சைக்கில் பயணித்துகொண்டிருந்த சமயத்தில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மோட்டார் வாகன விற்பனை நிலையத்திற்கு முன்பாக வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வண்டி வீதிக்கு ஏற முற்பட்டது. இதன் போது முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 45 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.