வவுனியா மருத்துவமனையில் புதிய கட்டடம் திறந்து வைப்பு!!

241


புதிய கட்டடம் திறந்து வைப்பு



வவுனியா மருத்துவமனையில் மறுசீரமைப்பு செய்யபட்ட குழந்தை பராமரிப்பு நிலையம் இன்றையதினம் (12.09.2019) திறந்து வைக்கபட்டது.



மருத்துவமனை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் 7.95 மில்லியன் நிதியில், இலங்கை கடற்படையினரால் குறித்த கட்டடம் மறுசீரமைப்பு செய்யபட்டது.




மருத்துவமனைப் பணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.


நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர் தி.திரேஸ்குமார், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.