வவுனியாவில் தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையினை புறக்கணித்த வர்த்தக நிலையங்கள்!!

282

தமிழ் மக்கள் பேரவை

எழுக தமிழ் நிகழ்வை முன்னிட்டு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையை நிராகரித்து வவுனியா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு வழமை போன்று வவுனியா நகரின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

யாழ் நகரில் நடைபெறும் கூட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களைப் பூட்டுமாறு தமிழ் மக்கள் பேரவையால் கோரப்பட்ட கடையடைப்பு கோரிக்கையினை வவுனியா வர்த்தகர் நலன்புரி சங்கம் நிராகரித்ததுடன் பேரவையின் கோரிக்கையினை தாம் நிராகரிப்பதாக தெரிவித்து வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரமும் வழங்கப்பட்டது.

வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்றையதினம் (16.09.2019) திறக்கப்பட்டுள்ளதுடன் வவுனியாவின் செயற்பாடு வழமை போன்று காணப்படுகின்றது.

அத்துடன் வவுனியாவில் போக்குவரத்து சேவைகள், பாடசாலைகள், சந்தைகள் போன்றனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.