வவுனியாவில் இ.போ.ச ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் : மக்கள் அவதி!!

556

மக்கள் அவதி..

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று (16.09.2019) காலை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இ.போ.ச ஊழியர்களுக்கான 2016.30, 2016.02 அரச நிர்வாக சம்பள சுற்றறிக்கையின் படி புதிய சம்பள முறை துரிதமாக நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தி அகில இ.போ.ச ஊழியர்களினால் செயற்படுத்தப்பட்ட தொழிற்சங்க போராட்டத்திற்கு செப்டம்பர் மாதம் 4ம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் சம்பளப் போராட்டம் ஒராண்டு நிறைவுபெற்றும் புதிய சம்பளம் ரூபா 2500 வழங்கப்படவில்லை எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அகில இலங்கை ரீதியிலுள்ள இ.போ.ச ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு வழங்கும் ரீதியில் வவுனியா சாலை ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இ.போ.ச வவுனியா சாலைக்கு முன்பாக இ.போ.ச ஊழியர்கள் இன்று (16.09.2019) காலை ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சகல ஊழியர்களுக்கும் உடனடியாக நிரந்த நியமனம் வழங்க வேண்டும், 2019ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 ரூபாவை வழங்கு, சாரதி, காப்பாளர்,

தொழிநுட்பபிரிவு ஊழியர்களுக்கு 2019 ஜனவரி மாதத்திலிருந்து அதிகரிக்கப்பட்ட ரூபா 2000 சம்பள உயர்வு அடிப்படை சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வேண்டும் போன்ற பாதாதைகளை ஏந்திய வண்ணம் சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவ கால சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.