வவுனியா செட்டிகுளத்தில் இளைஞர் யுவதிகளுக்கு சமூக பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு!!

536

செயலமர்வு

செட்டிகுளம் இளைஞர் கழக சம்மேளமும் செட்டிகுளம் இளைஞர் கழகங்கள் இணைந்து நடாத்தும் சமூக வலையத்தள பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரை இடம்பெற்றது

செட்டிகுளம் இளைஞர் கழக பிரதேச சம்மேள தலைவர் என்.நவநீதன் தலமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் விரிவுரையாளராக ஷர்ஜூன் கலந்து கொண்டு செயலமர்வில் பங்கு பற்றி இளைஞர் யுவதிகளுக்கு இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தொடர்பான விளக்கம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்.

இச் செயலமர்விற்கு அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் நிருஜன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ச.சசிக்குமார் ஆகியார் கலந்து கொண்டிருந்ததுடன் 60க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.