வவுனியாவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் படுகாயம்!!

511

மோட்டார் சைக்கிள் விபத்து

வவுனியா, தவசிகுளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கந்தபுரம் பகுதியில் இருந்து வவுனியா நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று தவசிகுளம், வைரவர் கோவிலடிப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மதகு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.