விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு நோக்கி தாயும், மகளும் மோட்டர் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது அதே வழியில் வேகமாக வந்த பிறிதொரு மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

குறித்த விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





