வவுனியாவில் விபத்தில் சிக்கிய திருமண ஜோடி : சோகத்தில் குடும்பத்தினர்!!

250

விபத்தில் சிக்கிய திருமண ஜோடி

இன்றைய தினம் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் நாளைய தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த நிலையில், இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றுள்ளனர்.

இருவரும் குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மணப்பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், துணைவனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் சிறு காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.