மக்கள் அவதி
பல கோரிக்கைகளை முன் வைத்து வைத்தியர்கள் இன்று காலை 8 மணிமுதல் ஆரம்பித்துள்ள 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தினால் வவுனியாவில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டமையினால் அப்பிரிவு வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதனால் வவுனியாவில் பல பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காகவும், அதிகாலை நான்கு மணி முதல் கிளினிக்களுக்காகவும், வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள், வைத்தியர்கள் எவரும் பணிக்கு சமுகம் தராமையினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனால் தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சை பெற முடியாது ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் செயற்படுவதாகவும் ஏனைய பிரிவுகள் வைத்தியர்கள் இன்றி செயற்படுவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.