விமானப்படை வீரர்
பதவியா பகுதியில் குடிமனைக்குள் புகுந்த யானை தாக்கியதில் விமானப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனுராதபுரம், பதவியா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து கடமைக்கு செல்வதற்காக காலை புறப்பட்ட விமானப்படை வீரர் ஒருவரை அப்பகுதி குடிமனைக்குள் புகுந்து நின்ற யானை தாக்கியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த குறித்த விமானப்படை வீரரை அப்பகுதி மக்கள் மீட்டு நோயாளர் காவு வண்டியில் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் 40 வயதுடைய விமானப்படை வீரரே படுகாயமடைந்தவராவார்.