வவுனியாவில் யாழிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரத்திற்காக 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவை!!

322


15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்த பாதுகாப்புக் கடவை



வவுனியா நகசபை பூங்கா வீதியில் அமைந்துள்ள புகையிரத பாதுகாப்பு கடவை இன்று (19.09.2019) காலை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தமையினால் அவ்வீதியூடாக பயணித்த பொதுமக்கள் மற்றும் வாகனசாரதிகள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.



குறித்த ரயில்வே பாதுகாப்பு கடவைக்கு அருகே 100 மீற்றர் தொலைவில் (வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே) காணப்படும் ரயில்வே பாதுகாப்பு கடவை திறக்கப்பட்டிருந்த போதிலும் இப் பாதுகாப்பு கடவை சுமார் 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தது.




இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு கடவையில் கடமையாற்றும் ஊழியரிடம் வினவிய போது, எனது கட்டுப்பாட்டு அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


இன்றும் சில நிமிடங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ள ரயில் வருகை தரவுள்ளது. இதன் காரணமாகவே 15 நிமிடங்களுக்கு முன்பாக பாதுகாப்பு கடவையினை மூடியதாக தெரிவித்தார்.

குறித்த பாதை 15 நிமிடங்களாக மூடப்பட்டிருந்தமையினால் அவ் வழியூடாக பயணித்த பல வாகனங்கள் மாற்றுப்பாதையூடாக தங்களது பயணத்தினை தொடர்ந்தனர்.