வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு!!

387

ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் “அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக ஆக்குதல்” என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் தங்கும் விடுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (20.09.2019) காலை 11மணியளவில் பாடசாலையின் அதிபர் ஆர்.வீரசிங்கம் தலமையில் இடம்பெற்றது.

இக் கட்டிடத்தின் நினைவுக் கல்வெட்டினை வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்ததுடன் கட்டிடத்தினையும் நடா வெட்டி திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதகிருஷ்ணன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக்க, ரிப்கான் பதியுதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள், அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் வருகையிகையடுத்து பாடசாலை முழுவதும் பா துகாப்புக்காக 20க்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.