வவுனியா நெடுங்கேணியில் 8 வயது மாணவி து ஸ்பிரயோக முயற்சி : இருவர் கைது!!

317

வவுனியா நெடுங்கேணியில்..

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவரை பா லியல் து ஸ்பி ரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவர் நேற்று (21.09) பாடசாலையில் மேலதிக வகுப்பு நிறைவடைந்த பின் பெற்றோரின் வருகைக்காக காத்திருந்த போது குறித்த பாடசாலையில் கட்டட நிர்மாண வேலைகளை செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் குறித்த சிறுமியை அழைத்து பா லியல் து ஸ்பிர யோகம் செய்ய முயற்சித்ததாக தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து நெடுக்கேணி பொலிசாரால் இருவர் குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செயள்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.