வவுனியாவில் பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள்!!

331

உதைபந்தாட்டப் போட்டிகள்

வவுனியா மாவட்ட பாடசாலைகள் பங்குபற்றும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (21.09) இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைப்பாந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் 12 வயது பிரிவு ஆண், பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பமாகியது.

25 பாடசாலைகள் பங்குபற்றிய குறித்த போட்டியானது விறுவிறுப்பாக இடம்பெற்றது. இவ் உதைப்பந்தாட்ட போட்டியை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கமலதாசன், சமூக சேவையாளர்கள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.