வவுனியாவில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்காக இலவச கல்வி நிலையம் திறப்பு!!

771

இலவச கல்வி நிலையம் திறப்பு

வறுமைக்கோட்டிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா நெளுக்குளம் பகுதியில் நிறுவனக்கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

க.சிவசிதம்பரம் அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட இவ் இலவசக் கல்வி நிறுவனத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (22.09.2019) காலை நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.

நிறுவனத்தின் பெயர்ப் பலகையினை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் திரைநீக்கம் செய்து வைத்ததுடன் கட்டிடத்தினை வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராஜா நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்.

அத்துடன் கணணி அறையினை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கல்வி நிறுவனத்தினுடாக கா.பொ .த சாதாரண தரம், உயர்தர கல்வியினை நிறைவு செய்த மாணவர்கள், கல்வியினை இடைநடுவில் கைவிட்ட மாணவர்கள், வறுமைக்கோட்டிக்குட்பட்ட ஆகிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் மற்றும் சிங்கள வகுப்புக்கள் மற்றும் கணிணி வகுப்புக்களை வழங்கவுள்ளோம்.

இதற்கான நிதி முற்றும் முழுதான எனது தனிப்பட்ட நிதியாகும். இலவசமாக வகுப்புக்களை நடாத்தும் எமது நிறுவனக்கல்வி நிலையத்தில் கற்கைநெறி வகுப்புகளை கற்கவுள்ள மாணவர்கள் அனுமதியை எமது அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனத்தின் ஸ்தாபகர் சிவசிதம்பரம் ரஞ்சன் தெரிவித்தார்.