கொழும்பு நகரம்

கொழும்பு நகரம் நேற்றைய தினம் பகல் வேளையில் இரவு போன்றதாக காட்சியளித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணரமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பின் பல பகுதிகளில் இரு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வானம் இருண்ட நிலையில் காணப்பட்டதுடன், பகல் வேளையில் இருள் சூழ்ந்துள்ளது.

பகல் நேரத்தில் வீதியில் பயணித்த வாகனங்கள் விளக்குகளை ஒளிர வைத்துக் கொண்டே பயணித்துள்ளன. கொழும்பின் பிரதான வீதிகளில் பல நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





