வவுனியாவில் விறகு வெட்ட சென்றவர்களுக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

606

வவுனியாவில்..

வவுனியாவில் விறகு வெட்ட சென்ற இருவர் கரடியின் தா க்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பாலமோட்டை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

பற்றை ஒன்றுக்குள் மறைந்திருந்த கரடியே இருவரையும் தா க்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவருகிறது. இதனையடுத்து குறித்த நபர்களும் கரடியின் மீது தா க்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீரையா கலைஞானம் (வயது 42), விஜயகுமார் பிரசாந் (வயது 31) ஆகியோரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.