வீதியில் இறங்கிய சட்டத்தரணிகள்

நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உ யிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும்,

சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம் முன்பாக இன்று (25.09.2019) காலை தமது வாயினை கறுப்பு துணிகளால் கட்டியவாறு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் தா க்குதல் சம்பவத்திற்கு தமது கடும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.

இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும். இதனை கருத்தில் கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து இன்று முதல் பணிப்புறக்கணிப்பில் சட்டத்தரணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போ ராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டதுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.





