வவுனியா வீதி விபத்தில் மின்சாரசபை ஊழியர் படுகாயம்!!

503

வவுனியா வீதி விபத்தில்..

வவுனியா – கல்மடு பகுதியில் இன்று மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, மோட்டார் வண்டியில் பயணித்த இலங்கை மின்சாரசபை ஊழியரொருவர் பலத்த காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளானவர் எகல்யகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மலித் என்ற இளைஞரென பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீதியில் நீர்வழங்கல் வடிகால் சபையினரால் நீர்குழாய் பொருத்துவதற்காக வெட்டப்படும் குழிகள் நீண்ட நாட்கள் மூடப்படாமல் வீதியில் மண்குவிக்கப்பட்டுள்ளமையால் வீதியில் இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் விபத்துக்குள்ளாவதாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.