
செம்மலை நீராவியடி ஆலய விவகாரம் தொடர்பில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக நாளை(26.09) காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
வவுனியா முகப்புத்தக சுயாதீன இளைஞர்களின் ஏற்பாட்டில் இக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
நீராவியடி ஆலய விடயத்தில் நீதிமன்ற தீர்ப்பினை பௌத்த பிக்குகள் அவமதித்தமை, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் தாக்கப்பட்டமை, இந்து ஆலயங்களின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தியமை உள்ளிட்ட விடயங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது சுயாதீனமாக இளைஞர்களால் முன்னெடுக்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் பங்கெடுத்து தமிழராய் இணைந்து பலத்த எதிர்ப்பை பதிவு செய்து அழுத்தம் கொடுக்க முன்வருமாறு இளைஞர்கள் கோரியுள்ளனர்.




