ம யானத்தில் இரவில் நடமாடிய..

வவுனியா இராசேந்திரகுளம் மயானப்பகுதியில் பு தையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெருன்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் உட்பட 8 நபர்களை நேற்று (26.09.2019) 11.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராசேந்திரகுளம் மயானப்பகுதியில் ச ந்தேகத்திற்கிடமாக சிலரின் நடமாட்டம் காணப்படுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஸ்ரீ திசநாயக்க தலைமையில் பொலிஸ் கொஸ்தாபர் ஜெயரூபன் வழிகாட்டலில் சென்ற குழுவினர் மயானப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி , இரண்டு மண்வெட்டி , பிக்கான் ஒன்று, மண் அள்ளும் கருவி, பூஜை பொருட்கள் போன்றவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கண்டி மற்றும் நுவர பகுதியினை சேர்ந்த 6 நபர்களும் விநாயகபுரம் பகுதியினை சேர்ந்த 2 நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை நெளுக்குளம் பொலிஸார் வவுனியா கு ற்றத்த டுப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் குறித்த 8 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




