சிரமதானம்

வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நகரை டெங்கு நுளம்பிலிருந்து மீட்கும் நடவடிக்கையின் சிரமதான பணிகள் இன்று (29.09.2019) முன்னெடுக்கப்பட்டது

குறித்த சிரமதான பணிகள் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வவுனியா – மன்னார் பிரதான வீதி, புகையிரத நிலைய வீதி, வைரவப்புளியங்குளம் போன்ற வீதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

இச் செயற்றிடத்தில் 20க்கு மேற்பட்ட பொலிஸார் பங்குபற்றியிருந்தனர்.





